கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா வழங்கியுள்ளதாக NDTV செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மேலும்,அதற்கு இந்தியா ஆதரவு வழங்கிய சில நாட்களே ஆனதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதற்கான எழுத்துப்பூர்வ அனுமதியை சீனாவின் எக்ஸிம் வங்கி நேற்று வழங்கியுள்ளதாக என்டிடிவி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.