இலங்கைக்கான 7 நாள் ஆய்வுப் பயணமாக 30 ஜேர்மன் தேசிய பயண முகவர்கள் குழுவொன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த காலப்பகுதியில் அவர்கள் ஹபரணை, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா, பெந்தோட்டை மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்தோடு, பயண முகவர்கள் குழுவை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.