இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்களின் தூதரகங்களுக்கு வரும் பெண்களின் வரவேற்பை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வெளிநாட்டு தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பான வீடுகள் நிறுவப்பட்டு, பல்வேறு சேவைகளைப் பெற தூதரகங்களுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்திட்டுள்ளது.
அத்தோடு, சட்டப்பூர்வ வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக மட்டுமே அந்த தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் ஆனால் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு சென்ற பெண்களுக்கு தேவையான அனைத்து நலன்புரி வசதிகளையும் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பீரோவில் பதிவு செய்யாமல் வெளிநாடு செல்லும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு வரும்போது பல்வேறு மோதல் சூழ்நிலைகளை உருவாகுவதாவும், மோதல்களை கட்டுப்படுத்த காவல்துறையை கொண்டு செல்ல வேண்டிய சம்பவங்கள், கடந்த காலங்களில் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள் உள்ளனதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் பல்வேறு சட்டவிரோதமான வழிகளில் வேலைவாய்ப்புக்காகவும், வெளிநாடுகளில் பணியிடங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்களையும் தூதரகங்களுக்கு வரவேற்பதை இடைநிறுத்துவதற்கும் பணியகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, குறிப்பாக சட்ட வழிகளில் பெண்களை ஊக்குவிப்பதற்காகவும், பல்வேறு தரகர்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் தலையீட்டின் ஊடாக பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதை தவிர்க்கும்நடவடிக்கையாகவும் பணியகம் அகுறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.