கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜுவ் லிஜியன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கையின் நிதி உதவி கோரிய போதே சாவோ லிஜியன் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனாவினால் தற்போது வரை இயன்றளவு உதவி செய்து வருவதாகவும், அதனை தொடர்ந்தும் செய்யும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சினுடைய பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தினார்..
மேலும் “இலங்கையினுடைய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக சீனாவினால் தற்போது வரை இயன்ற உதவிகளை செய்து இருக்கின்றது, இன்னும் நாங்கள் தொடர்ந்தும் அதைச் காட்டயம் செய்வோம்,” எனவும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவை வழங்கியுள்ளன என்றும் ஜுவ் லிஜியன் கூறினார்.
“சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன” என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜுவ் லிஜியன் தெரிவித்தார்.