அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பும் போது, அனுப்புபவரின் முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண்கள் (லேண்ட்லைன் மற்றும் மொபைல்), வாட்ஸ்அப் எண், இ-மெயில் முகவரி (மின்னஞ்சல்) ஆகியவற்றினையும் அனுப்பினால், பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.என பொது நிர்வாகங்கள், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரையின் பேரில், கடிதங்கள் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் அரச அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என அமைச்சின் செயலாளர் 29.08.2022 சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அரச நிறுவனங்களுக்கு மக்கள் கடிதம் அனுப்பும் போது, தாங்களாகவே கடிதம் அனுப்பும் போது ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்க, முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரியையும் அனுப்புமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.