அமெரிக்க திறைசேரி செயலாளரை மேற்கோள்காட்டி, இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்க முகவர் நிறுவனங்களுடன் இணைந்து பரிஸ் கிளப்பின் கொள்கைகளுக்கு அமைவாக நிதி நிவாரணம் வழங்குவதாகவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.