வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணிகள் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சினுடைய கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்களான திருகோணமலை, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய நிறுவனங்களில் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.
எவ்வாறாயினும், ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி பராமரிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.