மாகாண சபைகளை நீக்குவது தொடர்பில் சரியான புரிதல் இன்றி சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும், செலவினங்களில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதில்லை என அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.