இந்தியக் கடன் வரியின் கீழ் 11,000 மெட்ரிக் தொன் அரிசி இன்று (12) கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் டன் அரிசி சென் குளோரி கப்பலில் இன்று கொழும்பு வந்தடைந்ததாக உயர்ஸ்தானிகர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய உதவியின் கீழ் வந்த அரிசி கையிருப்பு கொழும்பு துறைமுகத்தில் உள்ள உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் இலங்கை அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவின் பல்முனை ஆதரவின் கீழ் கடந்த வாரத்தில் மட்டும் 16,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசேட பிணைப்பைக் குறிக்கும் இந்த விநியோகங்கள் தொடரும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.