2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், சுகாதார சேவை, பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சின் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பரிந்துரைகளுடன் செய்யப்பட்ட கோரிக்கைக்கு இணங்க,
முன்னதாக, இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகள் என்று கூறி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி 08-03-2022 திகதியிட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பொறுப்பான அமைச்சர்களின் பரிந்துரைகளுடன் மீண்டும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து, மேற்படி சேவைகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2022 செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.