முஹம்மட் ஹாசில்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இலங்கை இதழியல் கல்லூரியினால் நடத்தப்பட்ட சமூக உணர்திறன் அறிக்கையிடல் வதிவிட பயிற்சிப்பட்டறை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கொழும்பிலுள்ள Radisson ஹோட்டலில் கடந்த 16,17,18ஆம் திகதிகளில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்றது.
இந்த பயிற்சிப்பட்டறையின் நோக்கமாக பங்கேற்பாளர்கள் வகுப்பறைக் கற்றலில் இருந்து நிஜ உலக சமூக உணர்திறன் அறிக்கையிடல் சூழலில் புதிய திறன்களைப் பயன்படுத்துவதற்கு உதவுவதாக இருந்தது. இதற்காக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடக பயிற்றுவிப்பாளர்களால் அச்சு ஊடகத்தில் கதை சொல்லுதல், சமூக உணர்திறன் அறிக்கையிடலுக்கான Podcastயை பயன்படுத்தல், சமூக உணர்திறன் அறிக்கைகளை புதிய நுட்பங்களுடனும், விதிமுறைகளுடனும் இணையத்தின் காட்சிப்படுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் MOJO கதை சொல்லுதல் போன்ற தலைப்புகளில் விரிவுரைகளும் பயிற்சிகளும் சிறப்பாக வழங்கப்பட்டது, மேலும் சமூக உணர்திறன் அறிக்கைகளை வெளியீடுவதற்காக www.socialsensitivereporting.org எனும் தனியான இணையத்தளமும் இலங்கை இதழியல் கல்லூரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை கலந்து கொண்ட சகல பங்கேற்பாளர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் இலங்கை இதழியல் கல்லூரியினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் அழைத்துச்சென்று முழுமையாக பார்வையிடவும் அங்குள்ள நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளையும் கற்றறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் பங்கேற்பாளர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக கலை கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது, மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.