கடந்த 2022 ஆம் ஆண்டில் வனவிலங்கு திணைக்களம் அபராதமாக எழுபது இலட்சம் ரூபாவை ஈட்டியுள்ளதாக விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு நபர்களால் வனங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை வனஜீவராசிகள் திணைக்களம் நவம்பர் 2022க்குள் ஈட்டிய மொத்த வருமானம் 1,421 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யால தேசிய பூங்காவிற்கும் வில்பத்துவ மற்றும் வஸ்கமுவ தேசிய பூங்காவிற்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த வருடத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.