அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட 93 பில்லியன் ரூபாவில் 87 பில்லியன் ரூபா சம்பளம் வழங்குவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு ஜனவரி 25 ஆம் திகதி திட்டமிட்டபடி சம்பளம் வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளதோடு நிறைவேற்று அதிகாரிகளுக்கு அன்றைய தினத்திலோ அல்லது ஒரு நாள் தாமதத்திலோ சம்பளம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி மாதத்தில் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் வருமானம் 145 பில்லியன் ரூபாவாகவும் அதன் மாதாந்த வருமான இலக்காக சுமார் 10 பில்லியன் ரூபாவால் குறையும் எனவும் சுங்க மற்றும் கலால் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஜனவரி மாதத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 625 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், திட்டமிடப்பட்ட வருமானம் இருந்த போதிலும் 480 பில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்,