விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நேற்றிரவு ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் டானியா எஸ்.அபேசுந்தர, நாளைய தினம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் தனது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு, வர்த்தகர்கள் தற்போது பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கொழும்பு வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரசன்ன லியனகே தெரிவித்துள்ளார்.