பெற்றோல் விலை அதிகரிப்பால் முச்சக்கரவண்டி தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வாழ்வாதாரம் தொடர்பான கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள வேளையில் பெற்றோல் விலையை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், மக்களின் இக்கட்டான சூழலை கருத்திற் கொண்டு பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துடன், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.