உப்புவெளி, வள்ளுவர் பருத்தி குடியிருப்பு வளாகத்தில், ஒரு வயது குழந்தையொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை உள்ளூர் பெண் ஒருவர் குழந்தையை தனது வீட்டில் வைத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு. குழந்தையை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.