
ஜனவரி 2023 இல், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய பணம் 437.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஜனவரியில் வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் தொகை 68.8% (178.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.