பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் பதவியைஇராஜினாமா செய்யுமாறு பிரதமரிடம் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதியின் ஒரு அங்கமாகவே இந்த பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.