பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதோடு இதில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் உத்தியோகபூர்வ சேவைக் காலம் நாளையுடன் நிறைவடையவிருந்த நிலையில் 03 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.