இதுவரையில் விவசாயம் செய்யப்படாத கைவிடப்பட்ட தனியார் காணிகளை சுவீகரித்து பயிர்ச்செய்கையாளர்களிடம் கையளிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமது பிரதேசங்களில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கைக்காக கையளிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு நாளை முதல் அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தொல்பொருள் பெறுமதி, உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் நீர் வளங்கள் கொண்ட காணிகள் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட மாட்டாது என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் நெத் நியூஸிடம் தெரிவித்தார். காணி ஆணையாளர் இந்த அதிகாரத்தை மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்குகிறார். அதன்படி, அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஓராண்டுக்கு சாகுபடி செய்ய அனுமதிக்கப்படும்.