தற்போதைய நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்க பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சம்மேளனத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோனுடனான சந்திப்பின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ள நிலையில் இலங்கைக்கு உரம் தேவைப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும் இந்த நெருக்கடியான நிலையில் இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்க முடியும் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
உலகளாவிய உணவு நெருக்கடியின் மத்தியில், பங்களாதேஷ் அதிக உணவை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.