கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மைன கோ கம மற்றும் கோட்டகோ கம கிராமங்களில் கடந்த 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபராக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.