தம்மிக்காவின் பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.டி.டி. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டத்தினை தொடர்ந்து இவ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.