ஹுனுபிட்டிய கங்காராமய, பொத்துவில் முஹுது மகா விகாரை மற்றும் கூரகல ரஜமஹா விகாரை ஆகியன புனித இடங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் இதுவரை 78 புனித இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாட்டில் இதுவரை 81 விகாரைகள் புனித தலங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.