இன்றும் தனியார் பஸ் சேவைகள் 80 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. சில கிராமப்புறங்களில், பேருந்து சேவைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால் அலுவலகங்களுக்கு வரும் மக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவைகளும் 70 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் டீசல் நெருக்கடியே இந்த நிலைக்கு முக்கிய காரணம். இன்று சேவையில் ஈடுபடும் மொத்த தனியார் பஸ்களின் எண்ணிக்கை 18,000 எனவும், 3,600 மாத்திரமே இயங்குவதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பேருந்து சேவைகள் குறைந்துள்ளதால், தற்போது பலர் ரயில் மூலம் தங்களது போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இன்று காலையும் அதிகளவான பயணிகள் புகையிரதத்தில் கொழும்புக்கு வருவதை காணக்கூடியதாக இருந்தது.