நாளை முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை டட்லி வழங்குகிறார்
தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என டெம்பிள் அரிசி நிறுவனத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்தார்.
இதன்படி, எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் நாளை முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய அரிசி வியாபாரிகளும் இதே விலையில் அரிசியை வழங்க வேண்டும் என டெம்பிள் அரிசி நிறுவனத்தின் தலைவர் டட்லி சிறிசேன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.