எதிர்காலத்தில் ரயில் பயணங்கள் ரத்து அல்லது தாமதமாகலாம் என ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் கடமைக்கு சமூகமளிக்கும் போது ஏற்படும் சிரமங்களினால் இந்த நிலை ஏற்படுவதாக அதன் தலைவர் கே.ஏ.யு கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.
புகையிரத சாரதிகள் தமது தனியார் வாகனங்களில் கடமைக்குச் செல்வதாகவும், எரிபொருள் நிரப்புவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரயில் சேவைகள் குறித்த நேரத்தில் தொடங்குவதை உறுதி செய்யும் வகையில் ரயில் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு முறையான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 40,000 மெட்ரிக் டன் டேங்கர் வரும் தேதியை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் எரிபொருளை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.