உக்ரைன் ராணுவம் தற்போது ரஷ்யா இலக்குகள் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வலுவான தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ராணுவ உதவி அளித்து வருவதாகவும், இதற்கு பதிலடியாக ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் பலத்த தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று உக்ரைன் கிரிமியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்யா ராணுவத்தை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திஇருக்கின்றது.
எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.
கடந்த சில நாட்களாக கிரிமியாவில் உள்ள ரஷ்யா இலக்குகள் மீது உக்ரைனில் இருந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த தாக்குதல்களில் சுமார் 10 ரஷ்யா போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.