இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
இதேவேளை வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, சீன உரக் கப்பலுக்கு வழங்கப்பட்ட 6.9 மில்லியன் டொலர்கள் அல்லது அதற்கான இரசாயன உரங்களை பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.