மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (3ஆம் திகதி) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (2) தெரிவித்தார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் (3ம் மற்றும் 4ம் திகதி) இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும், எதிர்வரும் (5ம் திகதி) பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு மணிநேரமும் மின்சாரம் தடைப்படும் எனஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.