ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தின் சன்வெலி வட்டுஆய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி, உடவேரியவத்தை, சன்வெலி வட்டுவாய பகுதியில் நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
அப்போது செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழ் பள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெலமிட்டிய, குருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞசர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.