வரி ஏய்ப்பாளர்களுக்கு ஒரே மாதிரியாக செயற்படும் சட்ட அமைப்பு நாட்டுக்கு தேவை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மட்டும் வரி விதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து நிறுவனங்களும் எவ்வித வேறுபாடுமின்றி கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டினார்.