சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா உதவி (USAID) திட்டத்தின் நிர்வாக அதிகாரியான சமந்தா பவர், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
அவருடன் மேலும் 04 பேரும் தூதுக்குழுவாக வந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.
தோஹாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் KR-664 மூலம் 09/10 காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கைக்கான அமெரிக்கா தூதரகம் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சமந்தா பவர் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.