விவசாயிகளுக்கு வசதியாக இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சமந்தா பவர், ஜா அல, ஏகல பிரதேச விவசாயிகளை இன்று (10) சந்தித்து கலந்துரையாடினார்.
அங்கு அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்த பின்னர், நான்கு முன்னணி நபர்களைக் கொண்ட அமெரிக்கக் குழு, உரங்கள் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவதற்காக 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு அமெரிக்கா எவ்வாறு துணை நிற்கும் என்பது குறித்து ஆராய்வது அமெரிக்கப் பிரதிநிதியின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாகும்.