அக்குரஸ்ஸ – மாடோல பிரதேசத்தில் மூத்த சகோதரர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அலோபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் தனது மனைவியுடன் மடோல பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார், அங்கு மூத்த சகோதரர்கள் குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
காணி தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட மூத்த சகோதரர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.