பண்டாரகொஸ்வத்த உரகஸ்ஸகம பதுவஸ்நுவர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்த சிசுவொன்று சாண மூட்டையில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை அழும் சத்தம் கேட்டு மாடுகளை கட்ட சென்ற பெண் ஒருவர் சாண மூட்டையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை மீட்டுள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள் குழந்தையை ஆம்புலன்சில் நிகவெரட்டிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.