பாராளுமன்றத்தில் உணவுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, எம்.பி.க்கு புதிய சாப்பாட்டின் விலை 300 ரூபாயாகும்.
அத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளை செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கப்படும் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 150 ரூபாவாகும்.