தங்கொடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீடு மற்றும் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்திய நபர் ஒருவர் நேற்றிரவு (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் தங்கொடுவ பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மே மாதம் 9 ஆம் திகதி அருந்திக பெர்னாண்டோவின் வீடு மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.