இந்த வருடத்தின் அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் கிடைத்தன.
43 எம்.பி.க்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.
அந்தக் குழுவில் பல சமகி ஜன பலவேக எம்.பி.க்களும், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சையான எம்.பி.க்கள் குழுவும் இருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, சரித ஹேரத் மற்றும் கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய ஆகியோர் எதிராக வாக்களித்ததுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த வருடத்தின் அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.