கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் ட்ரக் வண்டியைத் தாக்கி தனியார் பேருந்து மற்றும் கெப் வண்டிக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
41 வயதான இந்த நபர் தொம்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என யக்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்