அநுராதபுரம் திரப்பனய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லமுடவ கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 62 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) அதிகாலை 3.30 மணியளவில் தோட்டத்திற்கு வந்த காட்டு யானையொன்று வீட்டின் பின் கதவுக்கு அருகில் வைத்து இவரைத் தாக்கியதாகவும், தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.