சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் டொலர் நெருக்கடி மற்றும் ரூபா நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக சுற்றுலாத்துறையை சுற்றுலா பொருளாதாரமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது குறிப்பிட்டார்.
இதேவேளை, இரவு நேர பொருளாதாரம் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஹம்பரான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.