
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் ஹாலிவுட் திரைப்படங்களை பார்க்கும் குழந்தைகளின் பெற்றோரை சிறையில் அடைக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானித்தினை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை வடகொரியா குழந்தைகள் பார்க்க தடை விதிக்க அதிபர் கிம் ஜாங்-உன் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இது தொடர்பான உத்தரவின்படி, குழந்தைகள் மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தால் அவர்களின் பெற்றோர் கைது செய்யப்படுவார்கள் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, இவ்வாறு கைது செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் 06 மாத காலத்திற்கு தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவர்களது பிள்ளைகளும் 05 வருடங்கள் தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குழந்தைகளின் கல்வி வீட்டிலிருந்து கற்க வேண்டிய நிலை ஏற்படும்மென்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான அறிவை வழங்காவிட்டால், முதலாளித்துவத்தில் வேடிக்கை பார்த்து சமூக விரோத கும்பலாக மாறுவார்கள் என்றும் வடகொரிய நிர்வாகம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.