கொள்கலன் கிடங்கில் பாரிய வெடிப்பு
பங்களாதேஷின் சிட்டகாங்கில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரத்தில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களின் உடல்களில் 60 முதல் 90 சதவீதம் வரை எரிந்துள்ளதாகவும் பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.