சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 15 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று காலை நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டனர்.
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினர், அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் இருந்து 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 15 ஆண்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.