பாடசாலை வேன் கட்டண உயர்வை கருத்தில் கொண்டு சிசு சரிய பஸ் சேவைகளை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான தற்போதைய கூட்டு இயக்க நேர அட்டவணையை குறுகிய கால ஓட்டங்களுக்கும் நீடிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், அலுவலகங்களை குறிவைத்து புதிய ரயில் சேவைகளை துவக்கவும், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.