இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை வருவதற்க்காய் இருக்கின்ற கடைசி டீசல் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இன்னமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டீசல் மற்றும் பெற்றோலுக்கான நீண்ட வரிசையில் இன்றும் தீவின் சில பகுதிகளில் காணப்பட்டதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, பொசன் போயாவிற்கு முந்திய தினமான ஜூன் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.