எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக கொழும்பிற்குள் நுழையும் வாகன நெரிசலைக் குறைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
வீடுகளில் இருந்து வருபவர்கள் மகும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சொகுசு பேரூந்துகள் மூலம் கொழும்பு நகருக்கு செல்ல முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பூங்கா மற்றும் சவாரி சேவை என பெயரிடப்பட்டுள்ள இந்த பேரூந்து சேவையானது கொழும்பில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய இலக்கை நோக்கி செல்வதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை வாகனங்களுக்கு பெற்றோர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் 20 புதிய பாடசாலை பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை பஸ்தியன் மாவத்தை மற்றும் மகும்புர ஆகிய இடங்களில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.