ரயில்வே இருப்பு காணிகளை தற்காலிகமாக பயிர்ச்செய்கைக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான மொத்த இருப்பு நிலம் சுமார் பதினான்காயிரம் ஏக்கர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணிகளில் புகையிரத திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவைப்படாத காணிகளை ஒரு வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.