ஜூன் 09ஆம் திகதி ஏற்பட்ட சீர்குலைந்த மின்வெட்டு காரணமாக நாட்டுக்கு சுமார் 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர் கலாநிதி விதுர ரலபனாவே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் செய்தி சேவை ஒன்றிற்குகருத்து தெரிவித்த அவர், மின்சார சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே மின் பொறியியலாளர்கள் இந்த நாசகார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
போட்டி டெண்டர் நடைமுறைக்கு அப்பால் மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் கடந்த 8 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுத்தது.
ஆனால், கடந்த 9ஆம் தேதி மின்சாரச் சட்டம் திருத்தங்கள் ஏதுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வேலைநிறுத்தத்திற்கு காரணமான மின்சார சட்டத்தின் 43வது பிரிவை நீக்கும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் 84 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.